Wednesday, January 15, 2020

சந்தித்ததும் சிந்தித்ததும் | வெங்கட் நாகராஜ் | எதிர்சேவை – பரிவை சே. குமார் - வாசிப்பனுபவம்

நண்பர் பரிவை சே. குமார் – மண்மணம் வீசும் இனிமையான எழுத்துக்குச் சொந்தக்காரர். பல தளங்களில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர். அவரது எழுத்துப் பணி கல்லூரி காலத்திலேயே தொடங்கி விட்டது என்றாலும் வலைப்பூக்களில் எழுத ஆரம்பித்த பிறகே எனக்கு அறிமுகம். 

நான் தொடர்ந்து, ரசித்து வாசிக்கும் கதைகளில் அவருடைய கதைகளும் உண்டு. சில கதைகள் படித்து நீண்ட நாட்களுக்குப் பின்னரும் மனதில் நினைவில் நிற்கும். 



வலைவழி உறவென்றாலும் நேரில் சந்தித்தது போன்று தொடர்ந்து நினைவில் நிற்பவர் குமார். ஒரு சில சமயங்களில் அவருடன் வாட்ஸப் வழியும் மின்னஞ்சல் வழியும் தொடர்பு கொண்டதுண்டு. 

இத்தனை வருடங்களில் வெளிவந்த அவரது ஆக்கங்கள் இன்னும் புத்தகமாகக் கொண்டு வரவில்லையே என்று அவ்வப்போது நினைப்பதுண்டு. 

இந்தியாவிலிருந்து பாலை நாட்டில் இருந்து கொண்டு புத்தகம் வெளியிடுவதில் சில சிக்கல்கள் உண்டு என்பதால் தான் வெளியிடாமல் இருக்கிறார் என்று எனக்கு நானே பதில் சொல்லிக் கொள்வேன்!


சந்தித்ததும் சிந்தித்ததும் | வெங்கட் நாகராஜ் | எதிர்சேவை – பரிவை சே. குமார் - வாசிப்பனுபவம் 
https://sigaram6.blogspot.com/2020/01/edhir-sevai-parivai-se-kumar-venkat-nagaraj.html 

1 comment:

Note: Only a member of this blog may post a comment.

Ads

Popular Posts