என் பர்ஸ் காணாமல் போகிறது. நான் உடனே பக்கத்தில் நிற்பவரை சுட்டி “இவர் தான் திருடினார், நான் பார்த்தேன்” என்றால் உடனே ஏற்று அவரை சாத்துவீர்களா? திருடப்பட்ட பொருள் அவரிடம் உள்ளதா, அதற்கு சி.சி.டிவி ஆதாரம் உள்ளதா என்றெல்லாம் கேட்க மாட்டோம்? இல்லை என்றால் குற்றம் சாட்டப்பட்டவரை விட்டு விடுவோம். “இந்த ஊரில் எல்லாருமே திருட்டுப் பசங்க தான், அதனால விடாதீங்க” எனச் சொல்ல மாட்டோம்.
ஆனால் பாலியலிலோ குற்றம் புரிவது ஆணின் இயல்பு என நாம் நம்புகிறோம். எந்த ஆணும் ஒரு சின்ன சந்தர்ப்பம் கிடைத்தால் ஒரு பெண்ணை வற்புறுத்துவான், பலாத்காரம் செய்வான் என நினைக்கிறோம். ஆணின் சபலம் குறித்து நம் சமூகத்தில் உள்ள பிம்பம் இதை செலுத்துகிறது.
#வைரமுத்து #சின்மயி #பாலியல் #குற்றம் #ஆணாதிக்கம் #பெண்ணியம் #சமூகம் #அறிவு #உறவு #காதல் #புரிதல் #மனம் #உரையாடல் #சிகரம்

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.