ஹாத்தி ஹௌடாக்களையும் பல்லக்குகளையும் பார்த்த பிறகு நாங்கள் அடுத்ததாய்ச் சென்ற இடம் DHதௌலத் KHகானா! சென்ற பகுதியில் சொன்னது போல, DHதௌலத் KHகானா என்பது சொத்துகளைச் சேகரித்து வைக்கும் இடம். அந்த காலத்தில் இருந்த ராஜாக்கள் தங்களிடம் இருந்த சொத்துகளைப் பாதுகாக்கவே பெரிய அறைகள் கட்டி இருந்தார்கள் – அந்த அளவிற்குச் சொத்துகள் இருந்திருக்கின்றன.
இன்றைக்கு அவற்றில் பல நம்மிடம் இல்லை – இருப்பவையும் ராஜாக்களின் பரம்பரையினர் கைகளில் அல்லது அவர்கள் நிர்வகிக்கும் ட்ரஸ்ட்-களின் கைகளில். இப்போது அந்த DHதௌலத் KHகானாவில் இருக்கும் பொருட்கள் வெகுவும் குறைவு.
#பயணம் #அனுபவம் #தமிழ் #வாழ்க்கை #ராஜஸ்தான் #ஜோத்பூர் #அக்பர் #அரசாட்சி #ஒளிப்படம் #வலைத்தளம் #கட்டுரை
என்னுடைய வலைப்பூவை/பதிவை இங்கே அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி சிகரம் பாரதி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!
Delete